புத்திசாலிகளின் 10 அடையாளங்கள். Top 10 facts about smart people



புத்திசாலி மனிதர்கள் தம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்ற எண்ணம் கொள்ள மாட்டார்கள். ஆனால் சாதாரண மனிதர்கள் புத்திசாலியாக தங்களைநினைத்துக் கொள்வார்கள்."டெய்னிங் க்ரூஜர்" எனும் ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது. நகைச்சுவை, இலக்கணம், தர்க்கம் போன்ற நான்கு வகையான துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது.
சாதாரண மனிதர்கள் 12% மதிப்பெண் எடுத்தாலும் அவர்கள் 62% மதிப்பெண் எடுத்து இருக்கலாம் என சராசரியாக நினைத்தார்கள்.

புத்திசாலி மனிதர்கள் சரியான கருத்துகளுடன் தங்கள் கூற்றை நிரூபிப்பார்கள் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உறவுகள் பாதிக்கப்படாமல் அதேசமயம் கருத்துக்களையும் ஆணித்தனமாக சொல்வதில் புத்திசாலி மனிதர்கள் வெற்றியடைவார்கள். நரம்பியலாளர் Jason s. Moser என்பவர் கூறுகையில்'புத்திசாலி' மனிதர்களின் மூளை மற்றவர்களின் தவறுகளின் போது வித்தியாசமாக செயற்படுவதை கண்டுபிடித்தார்.

புத்திசாலி மனிதர்கள் தனிமையில் இருப்பதை அதிகம் விரும்புவார்கள். அதனால் மகிழ்ச்சியும் அடைவர். LSE மற்றும் Singapore management University என்ற நிறுவனம் 15000 மக்கள் 18-28 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோதனை நடத்தினார்கள். இதில் கூடுதலான மற்றும் குறைவான புள்ளிகளை எடுத்தவர்கள் மனித  செரிவு அதாவது மக்கள்தொகை கூடிய பகுதிகளில் வாழ்வது மகிழ்ச்சி அற்றது. புத்திசாலித்தனத்தை பாதிக்கக்கூடியது போன்று கருதினார்கள். அதிக அறிவார்ந்த நபர்கள் அதிக நண்பர்களுடன் பேசுவது பழகுவது என்பதில் பெரும்பாலும் திருப்தி காண மாட்டார்கள்.

புத்திசாலி மனிதர்கள் சிறிது உடல் சோம்பேறித்தனத்துடன் இருப்பர் இவர்களின் புத்தி வேலை செய்யும்போது உடல் இயக்கம் குறையும் ஆனால் சாதாரண மனிதர்கள் புத்திக்காக செலவிடும் நேரம் சக்தி ஆகியவற்றை உடல் உழைப்பில் காட்டுவார்கள். புத்திசாலி மனிதர்களின் ஆழமான சிந்தனை உடல் இயக்கத்தை தடை செய்கிறது எனவே எமக்கு சோம்பேறித்தனமாக இருப்பது போலத் தெரியலாம்.

புத்திசாலி மனிதர்கள் தங்களது நேரத்தை வித்தியாசமான தலைப்புகளை வாசித்து தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதில் செலவிடுவார்கள். இவர்கள் இந்த தலைப்பில் நீங்கள் கேட்டாலும் சொல்லித்தருவதற்கு தரவுகளை சேர்த் வைத்திருப்பார்கள். எதைப்பற்றியும் பேச முடியுமான தைரியத்தில் இருப்பார்கள்.

புத்திசாலி மனிதர்கள் அதிகம் இன்டர்நெட் பாவித்து தகவல்களை அறிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆன்லைன் சர்வேயில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்டர்நெட் மூலம் தமது அறிவை வளர்த்துக் கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாசிப்பு மற்றும் எழுத்து திறமைகள் மேம்படுவது தெரிகிறது.

புத்திசாலி மனிதர்கள் இரவில் விழிப்புடனும் மூளை செயல்திறன் கூடுதலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் பகலுடன் தங்கள் வேலைகளை மட்டுப்படுத்தி முடித்துக்கொள்ள முற்படுகிறார்கள் என ராபர்ட் எலிசன் என்று விலங்கியல் நிபுணர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்து தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிட்ட ஒரு குழுவை "காலை உணர்வுடையவர்"  "மாலை உணர்வுடையவர்" என இரண்டாகப் பிரித்து மேற்குறித்த ஆய்வு மேற்கொண்டார்.

புத்திசாலி மனிதர்கள் அதிகம் இலத்திரனியல் உபகரணங்கள் (கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி) போன்றவைகளை அதிகம் உபயோகிக்க ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் அதில் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளவே... ஹெவல் பெக்கார்ட் என்ற ஒரு கல்வியாளர் கூறுகையில் "இது ஒரு தகவல் அறியும் நோய் (infomania) இதற்குக் காரணம் அறிவுப்பசி ஆகும். இது வேலை பார்ப்பவர்களின் வேலைகளையும் பாதிக்கிறது. மெசேஜ்கள் அறிவது ஈமெயில்களை சரி பார்ப்பது  போன்ற வேலைகளால் அலுவலக வேலைகளும் குடும்பத்தின் கடமைகளும் பாதிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

புத்திசாலி மனிதர்கள் திறந்த அறிவு உள்ளவர்களாகவும், சந்தர்ப்பத்தை புரிந்து கொள்பவர்களாக வும் இருப்பார்கள். இது இவர்களை சமூகத்தில் ஊடறுத்து பழகுவதில் எளிமையை ஏற்படுத்தும். 'Encyclopaedia Britannica' என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சூழலில் மாற்றம் ஏற்பட்டு முற்றிலும் புதியவை கண்டுபிடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

புத்திசாலி மனிதர்கள் புதிய புதிய கேள்விகளைக் கேட்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். இதனால் புதியவற்றை அறிந்து கொண்டே இருப்பார்கள். ஆர்வத்தை தூண்டும் புதிய புதிய விஷயங்களில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். இது அவர்களின் மூளை அமைப்புக்கேற்றவாறு அமைந்திருக்கும். மேலும் பிழைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்.

உங்களுக்குத் தெரிந்த புத்திசாலி நண்பர்கள் இருந்தால் மேற்கூறிய பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது நீங்களே புத்திசாலியாக இருந்தால் உங்களைப் பற்றி மற்றவர்கள் அறிய பகிர்ந்து கொள்ளுங்கள்.



2 comments:

  1. Ur intelligence made u to reach this level. Keep it up my luv sis . This article is very useful to learned and learning scholars .

    ReplyDelete

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...