உலகத்தில் நாம் காலத்தைக் கணிக்க பயன்படுத்துவது கலன்டர் ஆகும். இப்படிப்பட்ட கலன்டரை முதன்முதலில் அடிப்படை வடிவில் ஒழுங்கு படுத்தியது ஜூலியர் சீசர் என்ற ஒரு மன்னன்.13 மாதங்கள் மாதம்தோறும் 28 நாட்கள் என்ற பழைய வழமையை மாற்றி அமைத்து 12 மாதங்களாக உள்ள அடிப்படை காலண்டரை உருவாக்கியவர் இவர்.
இவருக்கும் ஏப்ரல் பூலுக்கும் என்ன சம்பந்தம்?
இவரது காலண்டரில் ஏப்ரல் முதலாம் திகதி புத்தாண்டாக அமைந்திருந்தது. இது கிறிஸ்து பிறப்புக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
கிறிஸ்து பிறப்பிற்கு பின் 1500 ஆம் ஆண்டுகள் அளவில் போப் கிரகோரி என்பவர் ஜூலியன் காலண்டர் காலத்தைத் தவறாக கணித்தது என அடையாளம் கண்டு தற்போது நாம் பாவிக்கும் கிரகோரியன் காலண்டரை அமைத்தார். இதனை உலகம் முழுதும் 1752ம் ஆண்டளவில் நடைமுறைப்படுத்த படுத்துவது என உலகத் தலைமைகள் தீர்மானித்தன. இதில் இவர் புத்தாண்டாக ஜனவரி மாதம் முதலாம் திகதி மாற்றியமைத்தார்.
ஏற்கனவே பழைய கலாச்சார சம்பிரதாயங்களை பின்பற்றி வந்த ஒரு சில மக்கள் ஏப்ரல் முதலாம் திகதி கொண்டாடப்படும் புதுவருட பிறப்பை தான் சரியான தெனவும் ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டையும் ஏற்க மறுத்தார்கள் போராட்டம் செய்தார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பா அரசாங்கங்கள் ஏப்ரல் முதலாம் திகதி புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் எனவே இது முட்டாள்கள் தினம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
எனவே முட்டாள்களாக மக்கள் விரும்புவார்களா? திட்டம் இட்டு அரசு மக்களை அந்த நாளை விட்டும் திசை திருப்பியது.
இதை அமுல்படுத்தும் விதமாக முதலாம் உலகப்போரின்போது பிரான்ஸ் ஜெர்மன் மீது முதலாம் திகதி ஒரு குண்டை வீசினர். மக்கள் பயந்து ஓட தொடங்கினர் ஆனால் குண்டு வெடிக்கவில்லை. ஏனெனில் அருகில் சென்று பார்த்தால் April fool என எழுதப்பட்டிருந்தது. இது வரலாற்றில் அழிக்க முடியாத தடமாக ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என நிறுவியது.
மக்களைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கமே ஏப்ரல் 1 ஐ முட்டாள்கள் தினமாக பிரகடனப்படுத்தியது.
இது தெரியாமல் நாம் ஏப்ரல் முதலாம் திகதி நண்பர்களை பொய்சொல்லி யும்முட்டாள்களாக்கி யும் இந்த தினத்தை கொண்டாடுகிறோம்.இனியாவது சிந்திப்போமா?
No comments:
Post a Comment